Wednesday 28 March 2018

பிள்ளைக்கறி ...

வேர்களில் வெந்நீரை
ஊற்றிவிட்டுக்
கையில் கூடையுடன்
கனிகளுக்குக் காத்திருக்கிறோம்.
பட்ட மரத்தின் சுள்ளிகள் கூட
நமக்கானதில்லை.
அட...
கோபத்தில் கூடையை
எறிந்துவிடாதீர்கள்.
நாளை
நம் பிள்ளைகளின் எலும்புகளை
எதில் பொறுக்குவது.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்