Friday 10 May 2019

தோப்பில் முகமது மீரான் மறைவு

எமது மரங்களில் கூடுகட்டி
இருந்த பறைவை
வானவெளியில் பறந்து சென்றது.
துறைமுகத்தருகே கூனன் தோப்பில்
குனிந்து தேடுகிறேன்
நீ நடந்த தடயங்களை.
இனி
நீயின்றிக் கிடக்கப்போகிறது
உனது சாய்வு நாற்காலி
நினைவுகளைச் சுமந்தபடி.
உன்னைத் தேடி ஓயாது கரைதொடும்
அலைகள்.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்