Friday 13 March 2020

காற்று மட்டுமே...

கதிரவன் மறைந்தாலும் மனிதக்
காலரவம் மறையாத பெருந்தெருக்கள்,
மேலிருந்து பார்த்தால்
வண்ணம் கண்ணுக்குத் தெரியாமல்
மறைத்துக்கொண்டு ஓடிய
ஊர்திகளின் கீழே
நீண்டு கிடந்த சாலைகள்,
இடையறாது இறைவனோடு
மனிதன் பேசிகொண்டிருந்த
வழிபாட்டிடங்கள்,
எங்கிலும்;
காற்று மட்டுமே கைவீசி நடக்கிறது.
தரை மெல்லக் கூன் நிமிர்க்கிறது.
கரியமிலவளியைப் பூசிக்கொள்ளாமல்
கண்சிமிட்டுகிறது வானம்.
சொந்த ஓசையெழுப்பிச்
சுழன்றோடுகின்றன ஆறுகள்.
இளைப்பாறுகிறது இயற்கை.
அணுக்குண்டுகளையே அச்சப்பட வைத்துவிட்டு
காற்றின் பாதைகளில் காத்துக்கிடக்கிறது
கொரோனா.

2 comments:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்