Friday 11 November 2022

குருசாமி மயில்வாகனன் பிறந்தநாள் வாழ்த்து



இலைக்கள்ளிச் செடிபோல் எல்லா இடத்தும்/ வலைவிரித்துச் சூழ்ச்சியால் நாடு கொண்டு/ தலையழித்து வளமனைத்தும் களவு செய்த/ துலைமாந்தர் கனவுடைக்கத் துணிவு கொண்டு/, அலையுரசும் தூத்துக்குடிக் கரையில் நின்று/ தலையுயர்த்திக் கப்பல் விட்டத் தாளாளன்/ மலைபோல் இங்கு வாழ்ந்த மாமனிதன்/ உலகநாதன் பரமாயி தலைமக னாம்/ நிலைகுலையாப் பெருமகனாம் சிதம்ப ரத்தின்/, பலரறியா வாழ்க்கைதனைப் பிறருணர நூலாக்கி/ விலைபோகா உளங்கொண்டு தனை வருத்தி/ வலியறிந்து தரவுபல தேடிச் சேர்த்து/ வலவன்பாடா செய்திசேர பெரியவர் வாழ்வை,/ முலைதழுவும் குழவிபோல் நாங்கள் துய்க்க/ வலைத்தளத்தும் நூல்புறத்தும் எழுதிச் சேர்க்கும்/ கலம்பகமாம் குருசாமி மயில் வாகனன்/ காலமெலாம் வாழி! வாழி! வாழியவே!!

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்