Friday 11 November 2022

ரெங்கையா முருகன் பிறந்தநாள் வாழ்த்து

 


உறிப்பானை உன்னித்தொட்ட மறுநாள் தொடங்கி

    முலைப்பால் மறந்தோடும் மதலை போல

அறவாளன் பெருந்தலைவன் அடலேறு சிதம்பரனார்

     நிலைச்செரு வறிந்த பின்னே நில்லாது

அறிந்தோர் அறியாதோர் தெரிந்தோர் தெரியாதோர்

      மலைக்கும்  வினாக்களொடு ஊர் திரிந்து

பறித்தெடுத்தப் பூக்களெலாம் பலரும் கொள்ள

    அலைந்து திரியும் அலந்தலை மறந்து

செறிவுறு சொற்களால் நிறைவுறப் பேசி

   உலைப்பாடு கொண்டு ஆங்கிலேயர் அஞ்சித்

தெறித்திட வாழ்ந்தத் திருமகன் வஉசி

    மலைக்காது செய்த மாப்போர் உரைக்கும்

அறிவுறு ரெங்கையா முருகன் வாழி!

   மலையுரசும் கதிரவனும் ஒளிரு மாறே.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்