Tuesday 29 November 2022

வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்.

தடம்பதித்துக்கொண்டே
கடற்கரையில் நடக்கிறேன்.
என் காலடித் தடங்கள்
உங்கள் பார்வையில் படுமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
அலைகளுக்குத் தெரியாது.

பாடிக்கொண்டே
பாதைகளில் நடக்கிறேன்.
என் குரலின் அதிர்வுகள்
உங்கள் காதுகளில் கேட்குமென
எண்ணிக்கொள்கிறேன்.
அது;
காற்றுக்குத் தெரியாது.

நீங்கள்
பார்த்தீர்களா? கேட்டீர்களா?
எனக்குத் தெரியாது.

நான் 
நடந்துகொண்டேயிருக்கிறேன்.

===========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
29-11-2021
===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்