Sunday 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 7

 

எத்தனை எழுதினாலும் என்நெஞ் சாறாதே
அத்தனேயெம் ஐயனே அரும்பேர் வித்தனே
பித்தனாய்ச் சொத்தினை விட்டனை எனவிருந்தேன்
அத்தனை ஆசையெம் விடுதலை மேலென
கத்தனும் உமக்கு கற்செக் கீந்ததில்
மொத்தமும் உணர்ந்தேன் நெஞ்செலாம் பலப்பல
குத்துவாள் கொண்ட பொத்தலாய் உடைந்தேன்
பத்தாயத்தடி சிதறும் பண்டமாய்ச் சிதறினேன்
மெத்தைமேல் நடந்தவன் சித்தனாய் ஆயினை
முத்தங்கி யணிந்தவன் முள்ளுடை உடுத்தனை
மைத்துனன் அலைந்ததும் மனையாள் நலிந்ததும்
தைத்ததெம் நெஞ்சை தம்மெழுத்தா லறிகையில்
நைத்ததெலாம் காலத்தின் நலமென்ற  தெய்வே
கைத்துதித் தேத்துவம் காலமெல் லாமுமையே

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்