Thursday, 20 March 2025

தலை நரைத்த குழந்தை.

ஙா... ங்ஙா... என்று

ஒற்றை எழுத்தை

மட்டுமே

உதட்டில் நிறைத்து

கை கால் உதறியபோது;

இரவும் பகலும் 

அன்பொழுக

அத்தனையும் பேசி வளர்த்த

அம்மாவிடம் பேச, 


சொற்கள் தேடி அலைகிறது,

அந்தத்

தலை நரைத்த குழந்தை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்