ஙா... ங்ஙா... என்று
ஒற்றை எழுத்தை
மட்டுமே
உதட்டில் நிறைத்து
கை கால் உதறியபோது;
இரவும் பகலும்
அன்பொழுக
அத்தனையும் பேசி வளர்த்த
அம்மாவிடம் பேச,
சொற்கள் தேடி அலைகிறது,
அந்தத்
தலை நரைத்த குழந்தை.
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்