Wednesday 11 December 2019

பாரதி பிறந்தநாள் 2019


கற்பனைக் காணியில்
கவிதையின் வரிகளில்
வீடு கட்டிக்கொண்டாய்.
எழுத்துகளால்
சில வேளைகளில் இரைப்பை
நிறைத்துக் கொண்டாய்.
இயற்கையை முயங்கி
இன் தமிழில்
மானுடம் பெற்றெடுத்தாய்.
பிறந்தாய் ஒளிர்ந்தாய்
மறைந்தாய்,
கண்மறைக்கும் முன்னுச்சி
மயிர்விலக்கி
காணும் முன்னே மறைந்த
மூன்றாம்பிறை போல.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்