Saturday 14 December 2019

நாடகம்


வெட்டப்பட்ட சிறகுகள்
அழகாய் இருக்குமென
ஆசிரியக் கிளியொன்று
பாடம் நடத்துது.
அடிமையாய் இருப்பதற்குச்
சிறகுகள் எதற்கென்று
அப்பா கிளியங்கே
ஆறுதல் சொல்லுது.
அத்தனை  உயிருக்கும்
மொத்தமாய் மழையொன்று
வெள்ளமாய்க் கொட்டுது.
அம்மணமாய் இருந்தபோதும்
பிள்ளைக்கிளி மட்டும்
நனையாமல் இருக்குது.
பொல்லாத நாடகம்
கூண்டுக்குள்ளே,
எந்நாளும் நடக்குது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்