Saturday 4 September 2021

மெல்லக் கொல்லும் நஞ்சு

உள்ளம் ஆரியம்
உதடு திராவிடம்;
கள்ளத்தனம் கலந்த
கவிதை நீ!

தமிழ் மொழியாம்
திராவிடம் இனமாம்
இலக்கணம் பிழைத்த
கவிதை நீ!

கால இடைவெளி
படையெடுப்பென்று
கால்கள் பிடிக்கும்
கவிதை நீ!

இன்னும் முன்னோர் 
யாரென அறியா
இருநூறு ருவா
கவிதை நீ!

========================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
04-09-2021
========================

2 comments:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்