Monday 4 November 2019

வள்ளுவர் சிலை அவமதிப்பு 04-11-2019

செம்மறியாடுகள் முட்டி
வானமலை சாய்வதில்லை.
ஈசல்களின் இறகுகள் மூடி
தென்கடல் மறைவதில்லை
காளான்கள் வளர்வதனால் உயர்
மலைவேம்பு வீழ்வதில்லை
உலகு திரும்புவதால் இரவேயன்றி
ஒருநாளும் கதிரவன் கறுப்பதில்லை.
காவியும் கறுப்பும் கலந்து மறைத்தாலும்
ஆவியில் கலந்த ஆசான் திருமறையோ
பாவிகள் தமக்கும் பகுத்தறிவூட்டி
வான்தொட வளர்வதைக் காணும் உலகு.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்