Monday 29 April 2019

பாரதிதாசன் பிறந்தநாள் 2019


பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்,
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்,
அவர்
வடித்துவைத்த பாக்களின்
துடிப்பெடுத்து வரும்நாளில்
தொண்டு செய்வோம் தமிழுக்குத்
துறைதோறும்.
ஏனென்றால் தமிழ் அவர்தம்
உயிருக்கு நேர்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்