Saturday 27 April 2019

தடம்


கடற்கரையில் சிறுபிள்ளை
நடந்த தடமொன்றை
தொடும் முன்னே அழித்த
அலைபோல,
யாரும் அறியாமல்
நீ வந்துபோன தடயத்தை
வலிந்து அழித்தாய்.
அந்தியும் இரவும்
சந்திக்கும் அந்தச்
சரியான நொடி கூட
அறிவேன் நான்.
பாறையில் பதிந்த தடம்
மழையடித்துக் கரைவதில்லை.
கோடுகளாய் நீளும்
கோளிருக்கும் காலம் வரை.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்