Sunday 28 April 2019

கோமதீ...


யாரைக் கேட்டும்
ஓடத் தொடங்கியதில்லை
பேராறுகள்.
பூசை செய்வீர்கள் என்று
படித்துறைகள் தோறும்
ஏங்கி நிற்பதும் இல்லை.
குப்பை வீசுகிறீர்கள் என்பதால்
தேங்கி நிற்பதும் இல்லை.
பிறந்ததிலிருந்தே அவை
பேராறுகள்.


 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்