Tuesday 23 April 2019

உலக புத்தக நாள்


உலகமெலாம் மக்கள்
மொழியைச் சூல் கொண்டிருக்க,
பேறு பார்த்த
ஆதித் தாயின்
மகனொருவன் எழுதிய
செங்கோன் தரைச்செலவின்
காலத்திலிருந்து நீள்கிறது
பொத்தகம் எனும்
ஆதிச்சொல்.
அதங்கோட்டாசானின் அருகிருந்து
கேட்கிறது
உலக புத்தக நாளொன்றின்
வாழ்த்தொலி, வாழிஇ என.

 

சிராப்பள்ளி ப.மாதேவன்
23-04-2019



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்